அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஃப்ளோரிடாவின் லிட்டில் டார்ச் கீ கடற்கரையிலிருந்து 50 மைல் தொலைவில் அகதிகளுடன் சென்று கொண்டிருந்த படகு, பலத்த காற்றினால் திடீரென கடலில் கவிழ்ந்தது.
இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.
தகவலறிந்து வந்த அமெரிக்க கடலோர காவல் படையினர், நீரில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 9 பேரை பத்திரமாக மீட்டனர்.
கடலில் மூழ்கி மாயமான 5 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
![](https://sirakukal.com/storage/2022/11/refugees-1-1024x577.jpg)
![](https://sirakukal.com/storage/2022/11/refugees-2-1024x655.jpg)
![](https://sirakukal.com/storage/2022/11/refugees-3-1024x575.jpg)