அம்பலாங்கொடையில் துப்பாக்கி சூடு – இருவர் பலி

அம்பலாங்கொடை கலகொடவில் நேற்றைய தினம் மாலை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

உந்துருளியில் வந்த துப்பாக்கிதாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் காயமடைந்தவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் இருவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் காயமடைந்த மற்றொருவர் பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர்கள் 44 மற்றும் 49 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடை – ஊரவத்தையில் நேற்று முன் தினம்  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பு கொண்டதாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.