இனி எரிபொருள் விநியோகத்தில் டோக்கன் முறை இல்லை.

இனி வரும் நாட்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் முறை நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  நடைமுறைப்படுத்தப்பட்ட டோக்கன் முறை தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் காணப்பட்ட நீண்ட வரிசைகளைக் குறைக்க ஆரம்பத்தில் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

பொதுமக்கள் வரிசையில் நிற்பதில் இருந்து விடுவிப்பதற்காகவும், ஜூலை 11 அல்லது 15 ஆம் திகதிகளில் எரிபொருள் கிடைத்தவுடன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் செல்லுமாறு அவர்களுக்குத் தெரிவிக்கவும் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும் குறித்த முறை பின்னர்  நடைமுறைப்படுத்தப்படாமல்  வியாபாரமாக மாறியுள்ளது.