இலங்கையில் புலம்பெயர் அலுவலகம் ஒன்றை அமைக்க திட்டம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

புலம்பெயர் மக்களின் ஆதரவை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கையில் புலம்பெயர் அலுவலகமொன்றை அமைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்நிலையில், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் வெற்றியடைய அனைத்து தரப்பினரின் ஆதரவும் அவசியமானது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (16/08/2022) பிற்பகல் நடைபெற்ற “அறிஞர்களின் சங்கம் – 2022” விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.