இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக தமிழில் சத்தியப்பிரமாணம்.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

விளையாட்டு, சமூகசேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களில் 12 பேரை மாநிலங்களவைக்கு நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம்.

அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார்.

கடந்த வாரம் திங்கட்கிழமை நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.

அமெரிக்காவுக்கு நிகழ்ச்சியொன்றில் பங்கேற்கச் சென்றதால் இளையராஜாவால் அதில் பங்கேற்க முடியவில்லை.

இதற்கிடையே, இசைஞானி இளையராஜா மாநிலங்களவை எம்.பி. ஆக பதவி ஏற்க நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா இன்றைய தினம் பதவியேற்றுக் கொண்டதுடன், அவர் தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்