ஊடகவியலாளர்  “நெடுந்தீவு லக்ஸ்மன்” காலமானார்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த ஊடகவியலாளர் நாகேந்திரர் லட்சுமண ராஜா இன்றைய தினம் வியாழக்கிழமை காலமானார்.

ஊடகவியலாளர் , கவிஞர் , எழுத்தாளரான  “நெடுந்தீவு லக்ஸ்மன்” என அழைக்கப்படும்  நாகேந்திரர் லட்சுமண ராஜா நெடுந்தீவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்.

இவர்  தொல்பொருள் திணைக்களத்தின் ஓய்வு நிலை உத்தியோகத்தர் ஆவார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள்  மற்றும் தேசிய பத்திரிகைகள் என்பவற்றிலும் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றியுள்ளார்.