இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைநகர் கடற்பரப்பில் வைத்து இவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.
அவர்கள் பயணித்த படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த 8 இந்திய மீனவர்களும் மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
![](https://sirakukal.com/storage/2022/09/08-Indian-Fishermen-1024x501.jpg)
![](https://sirakukal.com/storage/2022/09/08-Indian-Fishermen-21-1024x500.jpg)
![](https://sirakukal.com/storage/2022/09/08-Indian-Fishermen-3-1024x581.jpg)
![](https://sirakukal.com/storage/2022/09/08-Indian-Fishermen-2-1024x550.jpg)