ஏழு வயது சிறுமியை கடத்தி சென்றவர் மடக்கி பிடிப்பு

கொழும்பு காலி முகத்திடல் கடற்கரைக்கு தாய் மற்றும் தந்தையுடன் வந்த ஏழு வயது சிறுமியை கடத்திக் கொண்டு தப்பி ஓட முயன்றதாக கூறப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தங்கள் மகளை ஒருவர் கடத்திவிட்டு ஓட முயன்றபோது சிறுமியின் பெற்றோர் உதவி கேட்டு அலறியடித்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உடப்புசல்லாவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.