“ஓராயிரம் துயர் சுமந்து” பாடல் வெளியீடு

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு

வைகாசி மாதம் 18 ஆம் திகதி வடகிழக்கில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட நிலையில்

“ஓராயிரம் துயர் சுமந்து” எனும் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15ஆம் ஆண்டு நினைவுகள் சுமந்த பாடல் 17.05.2024 அன்று வெளியாகியுள்ளது.

“ஓராயிரம் துயர் சுமந்து” எனும் இப்பாடல் ஈழ உணர்வாளர் கண்ணா தயாரிப்பில் பொன்காந்தன் வரிகளில் இசையன்பன் இசையில் உருவாகியுள்ளது.

இப்பாடலை சிறகுகள் (Sirakukal) வெளியிட்டுள்ளது.

பாடல் காணொளி இணைப்பு