கனடாவில் வீடொன்றில் இரண்டு சடலங்கள் மீட்பு

கனடாவின் மிஸ்ஸிசாகுவாவில் வீடொன்றில் மர்மமான முறையில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பீல் பிராந்திய பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.

மிஸ்ஸிசாகுவாவில் குயின் வீதியில் அமைந்துள்ள பெரிய செங்கல் வீடொன்றில்  ஆணும், பெண்ணும் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவர் சம்பவம் தொடர்பில் அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.