கழிவுநீரில் போலியோ வைரஸ் கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் கழிவுநீரில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டதை அடுத்து பேரிடர் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் நகருக்கு வெளியே மூன்று இடங்களில் எடுக்கப்பட்ட கழிவுநீர் மாதிரிகளில் போலியோ வைரஸ்  கண்டறியப்பட்டதை அடுத்து நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் மாநில பேரிடர் அவசர நிலையை அறிவித்தார்.