குரங்கு காய்ச்சல் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்களுக்கு அதிகம் பரவும்.

குரங்கு காய்ச்சல் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களில் அதிகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களில் 99 சதவீதமானவர்களில் ஆண்கள் எனவும் அவர்களில் 95 சதவீதமானோர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.