கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில்  81mm மோட்டார் குண்டு ஒன்று மீட்பு

கொக்கட்டிச்சோலை கனடியனாறு குளப்பகுதியை அண்டிய காட்டுபகுதியில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் குண்டு ஒன்றை நேற்று (23) விசேட அதிரடிப்படையினர் மீட்டு செயலிழக்க வைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று 81 ரக மோட்டார் குண்டை விசேட அதிரடிப்படை குண்டு செயலிழக்கும் பிரிவினர் மீட்டு நீதிமன்ற அனுமதியை பெற்று அதனை அந்த இடத்தில் வெடிவைத்து செயலிழக்க செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்