தமிழ்நாடு, கோயம்புத்துர் காளப்பட்டி சாலையில் உள்ள தனது வீட்டில் அண்ணாமலை சாட்டையடி போராட்டம் நடத்தினார். பச்சை வேட்டி அணிந்து மேல் சட்டை அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்த அண்ணாமலை கயிறால் செய்யப்பட்ட சாட்டையால் தன்னைத் தானே அடித்துக் கொண்டார்.
தமிழ்நாடு அரசைக் கண்டித்து தன்னைத் தானே சாட்டையால் அடிக்கும் போராட்டத்தில் அண்ணாமலை
ஏழு முறை தன்னைத் தானே சாட்டையால் அடித்த நிலையில், எட்டாவது முறை சாட்டையால் அடிக்கும் போது பா.ஜ.க.வினர் அவரை தடுத்து நிறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர். கசியவிடப்பட்டதற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் என குற்றம் சாட்டினார். கடவுளுக்கு வேண்டி விரதம் இருக்கும் விதமாக இந்த சாட்டையடி போராட்டத்தை தான் கையில் எடுத்துள்ளதாக அண்ணாமலை கூறினார்.