சிறுவர்களிடையே பரவும் நோய்கள் குறித்து எச்சரிக்கை.

தற்போதைய நாட்களில், டெங்கு, இன்புளுவென்ஸா மற்றும் கொரோனா முதலான நோய்கள் சிறார்களிடையே பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நோய் நிலைமைகளுக்கு உள்ளாகும் சிறார்களின் எண்ணிக்கை கடந்த காலத்தில் அதிகரித்துள்ளதாக சிறுவர் நோய் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 பரவலானது தற்போதும் சமூகத்தில் உள்ளது.

பரிசோதித்து பார்த்தால், அதனை அறிந்து கொள்ளலாம்.

காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் தென்பட்டால், சில நேரம் இன்புளுவென்சா அல்லது கொரோனா தொற்றாக இருக்கலாம். என சிறுவர் நோய் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.