சீனியின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை.

தாய்லாந்தில் இருந்து சீனி இறக்குமதி செய்ய நேரிட்டால் சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, சீனி கிலோ ஒன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கக் கூடும் என இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சீனி கிலோகிராம் ஒன்று தற்போது சந்தையில் 265 ரூபா முதல் 300 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

இந்தியாவினால் சர்வதேச சந்தைக்கு சீனி உள்ளிட்ட மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டமை காரணமாகவே சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ளது.

இதேவேளை, சந்தையில் முட்டை 45 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இவ்வாறன பின்னணியில் தமது சங்கத்திடம் தேவையான அளவு முட்டை உள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நெருக்கடி காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பவற்றை கொண்டு செல்ல முடியாததன் காரணமாக தாம் கடும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சரத் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.