டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு!

டெங்கு நோயால் இவ்வருடம் இதுவரை 23,731 டெங்கு நோயாளர் அடையாளம் காணப்பட்டதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது

எதிர்வரும் நாட்களில் தொடர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறதுடன் இதனால், டெங்கு நோய் பரவல் மேலும் அதிகரிக்கலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் 5,057 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 2,214 பேரும், களுத்துறையில் 1,244 பேரும் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3,879 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.மேலும், இந்த மாதத்தில் இதுவரை 1,458 டெங்கு நோயாளர் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளனர்.