தாய்லாந்தில் மதுபான விடுதியில் தீ. : 13 பேர் பலி.

தாய்லாந்தில் இரவு நேர மதுபான விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தும், 40 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர்.

பாங்காக்கிலிருந்து தெற்கே சுமார் 150 கிலோமீட்டர் (90 மைல்) தொலைவில் உள்ள சோன்புரி மாகாணத்தின் சத்தாஹிப் மாவட்டத்தில் உள்ள மவுண்டன் பி நைட்ஸ்பாட் என்ற இடத்தில் அதிகாலை 1:00 மணியளவில் நேற்று இந்த தீ விபத்து ஏற்பட்டது.

உயிரிழந்தவர்களில் நான்கு பெண்கள் மற்றும் ஒன்பது ஆண்கள் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.

விடுதியின் சுவர்களில் எரியக்கூடிய படலம் காரணமாக தீ வேகமாக பரவியதாகவும், அதை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்களுக்கு மூன்று மணி நேரத்திற்கும் மேல் ஆனது என்றும் அவர் மேலும் தெரிவித்தனர்.