தென் கொரியாவில் ஹாலோவீன் கொண்டாட்டம்.  ;  160 பேர் பலி.

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சுமார் 160 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 100 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹாலோவீன் கொண்டாட்டத்துக்காக நகரின் பிரபலமான இரவு வாழ்க்கைப் பகுதியில் பெரும் கூட்டம் கூடியதால் மக்கள் நெரிசல் ஏற்பட்டது.

நேற்றிரவு 10 மணியளவில் ஏற்பட்ட இந்த நெரிசலில் இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட குறைந்தது 160 பேர் கொல்லப்பட்டதாக தீயணைப்புத் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நெரிசலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 20 வயதுக்குட்பட்ட பதின் வயதினர் என்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்று நோய்க்குப் பிறகு இடம்பெற்ற முதல் முகக்கவசம் இல்லாத ஹாலோவீன் நிகழ்வு இதுவாகும்.

இதேவேளை, ஹாலோவீன் பண்டிகையின் போது ஏற்பட்ட பேரழிவுக்கு தமது சோகத்தை தெரிவித்துள்ள தென் கொரியாவின் ஜனாதிபதி தேசிய துக்கக் காலத்தை பிரகடனம் செய்துள்ளதாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.