பக்தர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கி சூடு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில்  10 பேர் உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசியில், புனித தலத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் சென்ற பேருந்து மீது இன்று இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில்,  10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 33 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்னிலையில்  பேருந்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் பள்ளத்தில் கவிழ்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.