பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் மண்சரிவு – பெண் ஒருவர் மரணம்

திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் மேற்பிரிவு தோட்டத்தில் இன்று (3) அதிகாலை பெய்த கடும் மழையால் மண்சரிவு ஏற்பட்டு வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழப்பு

அதிகாலை 5:45 மணி அளவில் தனது குடும்பத்திற்கு உணவு சமைப்பதற்காக சமையலறைக்கு சென்றபோது மண்மேடு சமையலறை மீது சரிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த மண்சரிவு காரணமாக 59வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.