பாடசாலை ஆய்வுகூடத்தில் இரசாயனக் கசிவு..! 5 மாணவர்கள் 3 ஆசிரியர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பாடசாலையொன்றில் ஆய்வுகூட பரிசோதனையின்போது ஏற்பட்ட இரசாயனக் கசிவால் 5 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதி

புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் உயர்தர விஞ்ஞான மாணவர்கள் இன்று  காலை   (21)   பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டிருந்த வேளையில் Bromin புரோமின் என்ற இரசாயன குவளை உடைந்ததன் காரணமாக இரசாயனம் ஆய்வுக்கூடம் முழுவதும் பரவியுள்ளது.

இதனால் அங்கிருந்த ஐந்து மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும்  மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட நிலையில் புஸ்ஸல்லாவ வகுக்கப்பட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

நிலமையினை கட்டுப்பாட்டு கொண்டு வரும் நோக்கில் கண்டி தீயணைக்கும் பிரிவினர் பாடசாலைக்கு விரைந்துள்ள அதே நேரம் இரசாயனத்தை அப்புறப்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.