பாடசாலை பேருந்து கவிழ்ந்து விபத்து. ; 9 பேர் பலி.

மணிப்பூர் மாநிலத்தில் பாடசாலைப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மாணவிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

கல்வி சுற்றுலா சென்ற பாடசாலை மாணவிகள் பேருந்து, பழைய கச்சார் சாலையில் திரும்ப முயன்ற போது, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், சம்பவ இடத்திலேயே 5 மாணவிகள் பலியான நிலையில்,  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 20 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.