பிக் பாஸ் பணப்பெட்டியுடன் வெளியே போகிறவர் இவரா?

பிக் பாஸ் 7 வீட்டின் நடுவே பணப் பெட்டியை வைத்து போட்டியாளர்களின் மனதை மாற்ற பார்த்தார்கள். இது எல்லா சீசனிலும் நடப்பது தான். ஆனால் இந்த சீசனில் கலந்து கொண்டிருப்பவர்களோ, நேரம் ஆக ஆக தொகை அதிகரிக்கும் என காத்திருந்தார்கள்.
 
பெரிய தொகையாக வந்தால் எடுக்கலாம், இந்த பிச்சாத்து ரூ. 5 லட்சம்லாம் வேண்டாம் என பிக் பாஸிடமே கெத்து காட்டினார்கள். பணத்தை காட்டி யாரையாவது விரட்டிவிடணுமே என்று தொகையை அதிகரித்தார் பிக் பாஸ்.

 ப்ரொமோ வீடியோவில் என்னவோ ரூ. 9 லட்சம் வரை காட்டினார்கள். அப்படியும் யாரும் பெட்டியை எடுக்காததால் தொகையை குறைத்துவிடுவேன் என மிரட்டினார் பிக் பாஸ். ஆனால் நிஜத்தில் போட்டியாளர்களிடம் சரண்டர் ஆகிவிட்டார்.

லம்ப்பா ஒரு அமவுண்ட்டு வரட்டும் என போட்டியாளர்கள் பொறுமையாக காத்திருக்க வேறு வழியே இல்லாமல் தொகையை ரூ. 13 லட்சம் வரை உயர்த்தியிருக்கிறார் பிக் பாஸ். ரூ. 13 லட்சம் வந்துடுச்சு, அப்படியே ஒரு ரூ. 15 லட்சம் வந்தால் பெட்டியை தூக்கலாம் என போட்டியாளர்கள் கணக்கு போட்டு காத்திருந்திருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் தான் ரூ. 13 லட்சம் ஒன்றும் லேசான தொகை இல்லை. இத்தனை நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்கான சம்பளத்துடன் ரூ. 13 லட்சமும் சேர்ந்தால் நம் பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு உதவியாக இருக்கும் என விசித்ரா தான் அந்த பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு ஹவுஸ்மேட்ஸுக்கு குட்பை சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாராம்.

 விசித்ரா பணப் பெட்டியுடன் நேற்று இரவு 10.45 மணிக்கு கிளம்பிவிட்டார் என கேள்விப்பட்டோம். அப்படி பெட்டியை எடுத்திருந்தால் அந்தம்மா ரொம்ப சென்சிபிள். அவங்க இன்னும் அங்கே இருந்து கெட்ட பெயர் வாங்குவதற்கு சென்றுவிடலாம். ஆனால் பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட நிறைய பேருக்கு இதில் உடன்பாடு இல்லை என முன்னாள் போட்டியாளரான சுரேஷ் தாத்தா தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் ஃபினாலே வரை விசித்ரா வர வேண்டும் என பிரதீப் விரும்புகிறார். அதனால் தான் அவர் பணப் பெட்டியுடன் கிளம்பிய தகவல் அறிந்ததும் சந்தோஷப்படவில்லை.

விசித்ரா மேடம் ஃபினாலேவில் என்னுடன் இருக்க வேண்டும் என மாயா கூட கூறினார். ஆனால் இருந்த வரை போதும் என அவர் கிளம்பிவிட்டார் போன்று.

ஒயில்டு கார்டு மூலம் வந்த தினேஷ் தான் விசித்ராவுக்கு பெரிய தலைவலியாக மாறினார். அவர் எப்பொழுது பார்த்தாலும் விசித்ராவையே டார்கெட் செய்து விமர்சித்தார். அதனால் விசித்ராவால் கூலாக இருக்க முடியவில்லை.

மேலும் டைட்டில் தனக்கு கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பது விசித்ராவுக்கே நன்கு தெரியும். அதனால் தான் பணப்பெட்டி போதும் என கிளம்பியிருக்கிறார். அவரின் முடிவை குறை சொல்ல முடியாது.