போதைப்பொருள் கடத்த முயற்சித்த இலங்கையர் பாகிஸ்தானில் கைது!

சுமார் 10 கிலோ நிறையுடைய போதைப்பொருளை, கட்டாருக்கு கடத்த முயற்சித்த இலங்கையர் ஒருவர் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தோஹாவில் இருந்து புறப்பட இருந்த விமானத்தின் பயணிகள் சோதனையிடப்பட்ட போது, குறித்த நபரிடம் இருந்து இந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதன்போது, சந்தேகநபரின் பயணப் பையில் இருந்து 10 கிலோகிராம் 294 கிராம் நிறையுடைய ஹெராயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரான இலங்கையர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தான் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.