மலேசிய நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட 79 பேரில் 2 பேர் பலி

மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் அருகே பதங்கலி என்ற நகரில் தனியார் வேளாண் பண்ணை அருகே கூடாறம் அமைத்து பலர் தங்கியிருந்தனர்.

இந்நிலையில், இந்த வேளாண் பண்ணையில் இன்று அதிகாலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த  நிலச்சரிவில் 79 பேர் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 26 பேரை உயிருடன் மீட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்தனர்.

அதேவேளை , நிலச்சரிவில் 51 பேர் மண்ணுக்குள் புதைந்து உள்ளதால் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் 50-க்கும் மேற்பட்டோர் மண்ணுக்குள் புதைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.