மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக விசேட வேலைத்திட்டம்.

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக விசேட வேலைத்திட்டமொன்றை வகுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.

2022 ஆம் ஆண்டு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்திருந்தார்

“உள்ளடக்கிய அபிவிருத்திக்கான உருமாற்ற தீர்வுகள்: அணுகக்கூடிய மற்றும் சமத்துவமான உலகத்தை மாற்றுவதில் புதுமையின் பங்கு ” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த ஆண்டு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் முன்னெடுக்கப்படுகின்றது.

மேலும் சுகாதாரம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்களின் ஆதரவுடன் விசேட வேலைத்திட்டமும் வகுக்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.