முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி 17 அகவையுடைய இளைஞன் பலி.

முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் இரும்பு ஒட்டும் கடையில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டுப்பகுதியில் வசித்துவரும் 17 அகவையுடைய இளைஞன் குடும்ப கஸ்ரம் காரணமாக விசுவமடு 10 ஆம் கட்டைப்பகுதியில் உள்ள இரும்பு ஒட்டும் கடை ஒன்றில் வேலை செய்து வந்த நிலையில் இன்று காலை தொழில் கருவிக்கு மின்இணைப்பினை இணைக்கும் முயற்சியினை மேற்கொண்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தினை தொடர்ந்து இளைஞனின் உடலம் இளைஞர்களால் மீட்கப்பட்டு தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை எடுத்து செல்லப்பட்டுள்ளது.