முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் பங்கேற்பு…!

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்றையதினம்(18)  இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தல் நிகழ்வில், சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னெஸ் காலமார்ட் (Agnès Callamard)   கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மலர் தூவி வணங்கினார்.

இதேவேளை  வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினரால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையிலும் மக்களின் பேரெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.