யாழில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது. ; திருத்தி தருமாறு கெஞ்சிய தாய்.

தாவடி தெற்கு பகுதியில் யாழ் மாவட்ட சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட  புலனாய்வு பிரிவினருக்கு  கிடைத்த ரகசிய  தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நீண்ட காலமாக  ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரின் தாயார் இவரை திருத்தி தருமாறு பொலிசாரிடம் கோரிக்கையினை விடுத்துள்ளார்.

28 வயதான இளைஞன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய போதைப்பொருள் வியாபாரிகளுடன் நீண்ட காலமாக தொடர்பை பேணி வந்துள்ளதோடு, இதனை பிரதான தொழிலாக கொண்டு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.