இந்தியாவில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் கக்கடைதீவிலிருந்தே மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 ஜெலினைற் வெடிமருந்து குச்சிகள் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் நேற்று மாலை 6 மணியளவில் கக்கடை தீவிற்கு சென்ற கடற்படையினர் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஜெலினைற் வெடிமருந்து குச்சிகளை மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட வெடிபொருட்கள் ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த தீவில் மனிதர்கள் வாழ்வதில்லை எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
![](https://sirakukal.com/storage/2022/10/11-edited.jpg)
![](https://sirakukal.com/storage/2022/10/22-1024x589.jpg)
![](https://sirakukal.com/storage/2022/10/44-1024x364.jpg)
![](https://sirakukal.com/storage/2022/10/88-1024x679.jpg)
![](https://sirakukal.com/storage/2022/10/233-1024x720.jpg)
![](https://sirakukal.com/storage/2022/10/455-1024x525.jpg)