யாழ் பல்கலைக்கழகத்தில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு.

முல்லைத்தீவு  வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 14ஆம் திகதி  இலங்கை வான்படையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த பாடசாலை மாணவர்களின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான நினைவு தூபியில் காலை 11:30 மணியளவில்  யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவுருவ படத்திற்கு ஈகைச்சுடரேற்றப்பட்டதோடு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஒரு நிமிட அகவணக்கமும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவரினால் படுகொலை தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.

இதன்பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் பிரதிநிதிகள், மாணவர்கள், பலகலைக் கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.