முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச இன்று (25) காலை பெலியத்த பகுதியில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
யோஷித ராஜபக்ச 2006 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்ததற்கான போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் தெரிவித்ததை அடுத்து இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, யோஷித ராஜபக்ச தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி மேலும் நடவடிக்கை எடுப்பதற்காக இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணியின் உரிமை குறித்து ஜனவரி 3 ஆம் திகதி யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.