லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து. ; 6 பேர் பலி.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது.

சென்னை –  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொழுப்பேடு என்ற இடத்தில் அதிவேகமாக சென்ற பேருந்து, இரும்பு கம்பி ஏற்றிச் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதில் பேருந்து முழுவதும் சேதமடைந்த நிலையில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பேருந்தின் சாரதி உட்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் செங்கல்பட்டு அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.