வவுனியாவில் வாள்வெட்டு. : குடும்பஸ்தர் வெட்டிக்கொலை.

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக சாவடைந்துள்ளார்.

இன்று (31) மாலை  ஆச்சிபுரம் பகுதிக்கு சென்ற ஆயுதம் தாங்கிய குழு ஒன்று அவரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அவரது உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, ஒரு கை முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக சிதம்பரபுரம் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டனர்.

குறித்த  சம்பவத்தில் ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சா என்று அறியப்பட்ட யோன்சன் வயது 30 என்ற குடும்பஸ்தரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.