வவுனியா புளியங்குளம்  பகுதியில் விபத்து. ;  ஒருவர் பலி.

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இன்று (13) காலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

வவுனியா நகர் பகுதியில் இருந்து யாழ் நோக்கி புளியங்குளம் பாடசாலைக்கு முன்பாக சென்று கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் எதிரே வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி 49 வயதுடைய பஞ்சநாதன் குகேந்திரன் என்ற நபரே  மரணமடைந்தவராவார்.

சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.