அஜர்பைஜான் எல்லையில் நடந்த மோதலில் 49 படையினர் பலி.

ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் எல்லையில் நடந்த மோதலில் 49 அஜர்பைஜான் படையினர் உயிரிழந்தனர்.

ஜர்முக், கோரி மற்றும் கபன் உட்பட எல்லைக்கு அருகே உள்ள பல நகரங்களில் நேற்று அதிகாலை செல் தாக்குதல் நடத்தியதாக ஆர்மேனியா தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், செல் தாக்குதல்கள் பெரிய அளவிலான ஆத்திரமூட்டலுக்கு பதிலளிக்கும் வகையில் நடத்தப்பட்டதாக ஆர்மீனியா தெரிவித்துள்ளது.

சோவியத் ஒன்றியத்திலிருந்த காகசஸ் பகுதியைச் சேர்ந்த ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையே ரஷ்ய – யுக்ரேனிய நெருக்கடி காரணமாக மீண்டும் போர் மோதல்கள் எழுந்தன.

அஸர்பைஜான் பிராந்தியமாக கருதப்படும் நாகோர்னோ – கராபாக் உரிமைக்காக இரு நாடுகளும் பல தசாப்தங்களாக போராடி வருகின்றன.