அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி புதிய சாதனை

அவுஸ்திரேலியாவிற்கு எதிராக  கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 291 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதனடிப்படையில் இலங்கை அணிக்கு 292 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் ட்ரவிஸ் ஹெட் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும் அணித்தலைவர் ஆரோன் பின்ச் 62 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் ஜெப்ரி வென்டர்சே 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் பெத்தும் நிஸ்ஸங்க 137 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், குசல் மென்டிஸ் 87 ஓட்டங்கள் பெற்ற நிலையில் உபாதை காரணமாக போட்டியில் இருந்து வௌியேறியிருந்தார்.

அதனடிப்படையில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2 -1 என்ற ரீதியில் இலங்கை முன்னிலையில் உள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிகபடியான ஓட்டங்களை தமது இரண்டாவது இன்னிங்ஸில் பதிவு செய்து இலங்கை அணி புதிய சாதனையை படைத்துள்ளது.