இந்திய அணி வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில், இந்திய அணி, 2 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

மும்பை – வான்கடே மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்களில், 5 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 163 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 160 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் 1 க்கு 0 என்ற அடிப்படையில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.