இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலை அதிகரிப்பு

லிட்ரோ நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 4,610 ரூபாவாகும்.

அத்துடன் 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,850 ரூபாவாகும்.

மேலும் 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 45 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 860 ரூபாவாகும்.