இரணைமடு குளத்தில் மூழ்கிய சிறுவன் மாயம்!

கிளிநொச்சி – இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

மேற்படி, சிறுவன் அவரது சகோதரன் மற்றும் நண்பர்களுடன் நேற்று (29) முற்பகல் 11.30 மணியளவில் நீராடச் சென்ற போதே நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.

திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்று வரும் முறிகண்டி – வசந்தநகர் பகுதியில் வசிக்கும் செல்வரத்தினம் ருஷாந்தன் எனும் சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில், அந்தச் சிறுவனைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.