இரண்டு பஸ்கள் மோதி விபத்து ; 40 பேர் பலி.

மேற்குஆப்பிரிக்காவில் உள்ள செனகல் நாட்டில் இரண்டு பஸ்கள்  ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து  இடம்பெற்றுள்ளது.

செனகலில் கப்ரினி நகரில் நேற்று முன் தினம் மாலை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதின.

குறித்த விபத்தில்  40 பேர் உயிரிழந்துள்ளதோடு, 87 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில், அனுமதித்தனர்.

டயர் வெடித்ததில் கட்டுபாட்டை இழந்த பஸ் வீதியின் எதிரே வந்த மற்றொரு பஸ் மீது மோதி இந்த விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பஸ் விபத்தில் படுகாயமடைந்த பலரின் உடல்நிலை மோசமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.