ஈரானில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் பலி.

ஈராக்கின் கிழக்கு பாக்தாத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உதைபந்தாட்ட மைதானம் மற்றும் உணவகம் ஒன்றுக்கு அருகில் உள்ள வாகன தரப்பிடம் ஒன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மகிழுந்து ஒன்றில் முதலில் இந்த வெடிப்பு இடம் பெற்றதை அடுத்து, அருகில் இருந்த எரிவாயு கொள்கலனும் வெடித்து தீப்பற்றியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன