ஒரு மில்லியன் ரூபாவுக்கு ஏலம் போன  வவுனியா மாம்பழம்.

வவுனியாவில் நேற்றைய தினம் ஒரு மில்லியன் ரூபாவுக்கு மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஏலம் போன நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா மரக்காரம்பளை வீதி கணேசபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய அலங்கார திருவிழாவின் ஆறாம் நாள் திருவிழாவின் போது இறைவனுக்கு படைக்கப்பட்ட மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஏலத்தில் விடப்பட்ட போது கடும் போட்டிகளுக்கு மத்தியில் சபரிராஜன் என்ற மாணவன் அவற்றை ஒரு மில்லியன் ரூபாவுக்கு ஏலம் எடுத்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஏல விற்பனையில் இந்த மாம்பழங்களையும், மாலையையும் குறித்த மாணவன் பெற்றுக் கொண்டமை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

கிராமப்புற ஆலயம் ஒன்றில் இவ்வாறு பெரிய தொகைக்கு மாம்பழங்கள் ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த ஏலத்தொகை குறித்த ஆலயத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

   

வவுனியா ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்