கடமைக்கு திரும்பாவிடின் பதவி நீக்கம்!

இலங்கை புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியுள்ள போதிலும் மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் அனைத்து நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்களுக்கு இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னதாக அந்தந்த புகையிரத நிலையத்திலோ அல்லது அருகில் உள்ள புகையிரத நிலையத்திலோ கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யாத அனைத்து நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் சேவையை விட்டு விலகியவர்களாக கருதப்படுவார்கள் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.