கண்ணில் மிளகாய் தூள் தூவி ஆசிரியையின் சங்கிலி கொள்ளை!

பசறை – கொட்டமுதுன பகுதியில் ஆசிரியர் ஒருவரின் கழுத்திலிருந்த சங்கிலியை கண்ணுக்குள் மிளகாய் தூள் தூவி அறுத்துச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தல – பெல்வத்தைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேகநபரே இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிங்குருகடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை முடிந்து வீடு செல்லும் வழியில் மறைந்திருந்த குறித்த நபர், அந்த வழியில் சென்ற ஆசிரியை ஒருவரின் கண்ணுக்கு மிளகாய் தூளைத் தூவி விட்டு கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்துள்ளதுடன், காட்டுப் பகுதிக்குள் சென்று மறைவாகியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபர் ஹிங்குருகடுவ காவல்துறையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை பசறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிங்குருகடுவ காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.