கனடாவில்  21 வயதுடைய இந்திய இளம் பெண் ஒருவர் சுட்டுக்கொலை.

கனடாவின் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த இந்திய இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட விடயம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை இரவு, 10.40 மணி அளவில், மிசிசாகா நகரில் அமைந்துள்ள  எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில், துப்பாக்கிச்சூடு நடந்ததாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

பொலிசார் அங்கு விரைந்த போது, இந்திய இளம் பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்திருந்தார். உடலில் பல இடங்களில் குண்டு பாய்ந்து அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல், அவர் உயிரிழந்துள்ளார்.

பஞ்சாபைச் சேர்ந்த இந்த பெண் கனடாவில்  பிராம்டனில் வாழ்ந்து வந்துள்ளார்.  உயிரிழந்த பெண்  21 வயதுடைய  பவன் ப்ரீத் கவுர் எனவும்  எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பணியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் யாருக்காவது ஏதாவது தகவல் தெரிந்தாலோ, தங்கள் வீடுகள் அல்லது காரில் உள்ள கமெரா எதிலாவது ஏதாவது காட்சிகள் பதிவாகியிருந்தாலோ, தங்களுக்குத் தகவல் தெரிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.