காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளால் கிளிநொச்சியில் போராட்டம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளால் இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.

இதன்போது, சர்வதேசத்திடம் நீதி கோரி மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.