காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் பலி

கரூர், விராலிமலை அரசு பள்ளி மாணவிகள் தொட்டியத்தில் உள்ள கல்லூரியில் நடந்த கால்பந்து போட்டிக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மாயனூர் தலையணையை சுற்றி பார்க்க தமிழரசி, சோபிகா, இனியா, லாவண்யா ஆகிய மாணவிகள் வந்துள்ளனர். அப்போது ஆற்றில் இறங்கி நீரில் மூழ்கிய ஒருவரை காப்பாற்ற முயன்று ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கினர்.

அதனையடுத்து, தீயணைப்பு படையினர் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தற்போது 4 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆற்றில் சுழல் இருப்பதை அறியாமல் இறங்கியதால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.