“கிளப் வசந்த”வின் கொலையில் மாணவிக்கு தொடர்பா?

“கிளப் வசந்த” என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்தவின் சடலம் வைக்கப்பட்டிருந்த பொரள்ளை மலர்ச்சாலைக்கு இரு தடவைகள் கொலை மிரட்டல் விடுவதற்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் தொலைபேசி இலக்கம் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பல்கலைக்கழக மாணவி மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் இவர் பொரள்ளை பிரதேசத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்று வருவதாக தெரியவந்துள்ளது.

இந்த தொலைபேசி இலக்கம் அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்காக மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தொலைபேசியில் அழைப்பு விடுத்தது யார் என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.